தமிழகத்தில் ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் காட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. அந்த வகையில் திமுக கட்சி தங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்பட்டு தொகுதி பங்கீடு கையெழுத்தானது.
இதனையடுத்து தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 187 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் திமுக வேட்பாளர்கள் 174 பேரும், கூட்டணி கட்சி சார்பாக 14 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.
திமுகவில் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட், இந்திய கமியூனிஸ்ட், விசிக, மதிமுக, ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.
மனித நேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் மற்றோரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகிறது. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அக்கட்சி தனி சின்னத்தில் போட்டியிடுகிறது.
கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை ஆகியவற்றிக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுகவின் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நிறைவடைநது. அதனையடுத்து கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என திமுக அறிவித்த நிலையில் நேற்று முன்தினம் (10.03.2021) திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் நேற்று மாலை திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியடப்படும் என தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது இன்று (12.03.2021) காலை 10 மணிக்கு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அறிவிப்புகளுக்குப் பின்னரும் வேட்பாளர் பட்டியல் வெளியாவது தாமதமாகி வரும் நிலையில் எப்போது வேட்பாளர் பட்டியல் வெளியாகும் தொண்டர்கள் ஆர்வத்துடனும், சில வேட்பாளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் இடம்பெறுமா என்ற கவலையுடனும் காத்திருக்கின்றனர்.