கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று நாகர்கோவிலில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் மருத்துவம் குறித்து கேட்டறிந்தார்.
அதனையடுத்து மருத்துவர்களின் தேவை நோயாளிகளுக்கு தேவைப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந்து மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட விஜய் வசந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, குமரி மாவட்டத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாவட்டத்தில் ஆக்சிஜன் தேவை மற்றும் தடுப்பூசியின் தேவை தட்டுப்பாடு இருப்பது உண்மை தான் இந்த தட்டுப்பாடு ஒரு சில நாட்களில் தீரும் தமிழக அரசு இதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஒரு சில நாட்களில் தேவைக்கு அதிகமாக ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசி கிடைக்கும், பொது மக்கள் தற்போது உள்ள அசாதாரண சூழ்நிலையில் தேவைக்கு மட்டும் வெளியே வரவும் மற்ற நேரங்களில் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இப்போது உள்ள சூழ்நிலையில் வெளிநாடுகள் தடுப்பூசி கொடுக்க முன்வந்தால் அதனை வரவேற்று ஊக்கப்படுத்தி வாய்ப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.