சென்னை பல்கலை இணைப்பு கல்லுாரிகளில் தலா இரண்டு இடங்களில் கட்டணமின்றி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த திட்டம் 10 ஆண்டுகளாக அமலில் உள்ளது.
இந்த ஆண்டு கட்டணமில்லாத பட்டப்படிப்பு சேர்க்கை திட்டத்தில், 313 மாணவர்கள் தேர்வு செய்யப் பட்டு உள்ளனர். அவர்களுக்கு துணைவேந்தர் கவுரி, இன்று ஒதுக்கீட்டு ஆணை வழங்க உள்ளார்.
இந்த இலவச கல்வி திட்டத்தின் கீழ் பயில விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள மாணவர்கள் www.unom.ac.in எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொருளாதரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நடப்பு கல்வியாண்டு முதல், எம்.பில்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுவதாக, நேற்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைப்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.