சென்னை:
செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்க தமிழ் நாடு அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழக அரசு அறிவித்த கொரோனா ஊரடங்கு தளர்வுகள் மற்றும் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்பைடையில் 9,10,11,12 வகுப்புகளும் மற்றும் கல்லூரிகளும் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்க தமிழ் நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதுபோன்று செப்.1 முதல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.
எனவே, 2021-22 கல்வியாண்டில், மாணவர்/மாணவியர்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அனைத்து போக்குவரத்துக் கழகங்களால் வழங்கப்படும் வரை அரசு பேருந்துகளில் பள்ளி மாணவ மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, நடத்துநர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து பயிலும் பள்ளி வரை சென்றுவர கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.