இந்தியாவின் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரான வினோத் குமார் பணியின் போது பனிச்சரிவில் சிக்கி கால் முழுவதும் செயலிழந்தது. இதன் மூலம் டோக்கியோவில் நடைபெற்று வருமபாராலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் பங்கேற்றார்.
நேற்று நடந்த வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார், எப்-52 பிரிவில் 19.91 மீ தூரம் எறிந்து மூன்றாவது இடத்துடன் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினாா்.. இந்நிலையில், இப்போட்டியின் முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டதுடன், வினோத் குமாரின் வெற்றியை தொழில்நுட்பக் குழு நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், இன்று வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. எப்-52 பிரிவில் பங்கேற்க வினோத் குமார் தகுதி பெறவில்லை என தொழில்நுட்பக் குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..
டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு மேலும் தங்கம் கிடைத்துள்ளது. ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுமித் அண்டில் 68.55 மீட்டர் தூரம் வீசியெறிந்து பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
சுமித் அண்டிலின் வெற்றி மூலம் ஒரே நாளில் 2 தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. இதன் மூலம் இந்தியா. டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை 2 தங்கம், 5 வெள்ளி, 1 வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது