திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன். அதில் அவரு கூறியதாவது ” தமிழகத்தில் ஊழல் தலை தூக்கிவிட்டது, எங்கு பார்த்தாலும் லஞ்சம். இங்கு உள்ள எல்லா துறைகளிலும் லஞ்சம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. அரசு மருத்துவமைகளில் பெண் குழந்தை பிறந்தால் 300 ருபாய், ஆன் குழந்தை பிறந்தால் 500 ருபாய் என்று லஞ்சம் வாங்குவது வழக்கமாக உள்ளது” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனிடம், ரஜினி கட்சி தொடங்க போவதாக சொல்லி நாடகமாடுவதை பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிருந்தனர். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன். “அவர் கட்சி ஆரம்பிப்பதைவிட அவரின் உடல்நிலை மிகவும் முக்கியம், ரஜினியின் உடல்நிலை சீரான பிறகே கட்சியை ஆரம்பிப்பதை பற்றி பார்த்துக்கொள்ளலாம்.
மேலும் அவருடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஜனவரியில் நல்ல முடிவு வெளியாகும் என்றார். தமிழகத்தில் மூன்றாவது அணியாக மக்கள் நீதி மையம் உள்ளதாகவும், விரைவில் மூன்றாவது கூட்டணி கட்சி அமையும் என்று தெரிவித்தார். இந்நிலையில் மூன்றாவதுப அணி வெற்றிபெறுமானால் அப்போது நான்தன் முதலவர்” என்று கூறியுள்ளார்.