எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்-ல் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்-களில் நூதன முறையில் பணம் திருடப்பட்டதை தொடர்ந்து, டெபாசிட் வசதியுடைய ஏடிஎம்-களில் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தரமணி, வடபழனி, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் டெபாசிட் ஏடிஎம்-களில் சென்சாரை மறைத்து நூதன முறையில் கொள்ளை கும்பல் ரூ.10 லட்சம் வரை பணத்தை திருடியுள்ளது தெரியவந்துள்ளது.
ஏடிஎம்மில் பணத்தை வெளியே தள்ளும் ஷட்டரில் 20 நொடிகள் பணம் எடுக்காவிட்டால் பணம் மீண்டும் உள்ளே சென்றுவிடும்.
அதேசமயம் பணம் எடுத்த பிறகும் ஷட்டரை 20 நொடிகள் பிடித்துக்கொண்டால் பணம் உள்ளே சென்றதாக பதிவாகிவிடும். இதை பயன்படுத்தி ஷட்டரை கையில் பிடித்தபடி ஒவ்வொரு முறையும் தலா ரூ.10,000 என எடுத்து ரூ.10 லட்சம் வரை மோசடி செய்துள்ளார்.
இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்-ல் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கல் முழிவுக்கு வந்ததும் மீண்டும் இந்த தடை விளக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.