சென்னை:-
தமிழகத்தில் 12ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் பிளஸ் 2 துணைத் தேர்வு துவங்கவுள்ளது.
இதன்படி, மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள், விண்ணப்பிக்காத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், மாவட்ட வாரியாக அரசு தேர்வுத்துறை சேவை மையம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு துறை சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
மேலும், 12ம் வகுப்பு துணை தேர்வுகள் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுளளது. அனைத்து தேர்வுகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.