தமிழகம்

கொரோனா பரவல்; மருத்துவ குழுவுடன் தலைமை செயலாளர் ஆலோசனை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா வைரஸ் தனது இரண்டாவது அலையை வீச தொடங்கியுள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ், குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில்  நேற்று ஒரே நாளில் 1385 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 496 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

ALSO READ  சுயேட்சை உறுப்பினர்கள் பாஜகவிற்கு ஆதரவு !

தமிழகத்தில் சில நாட்களாக நோய் பாதித்தவரின் எண்ணிக்கை 1000 கடந்து வருகிறது. இதனிடையே நோய் தொற்று அதிகரித்து வருவாதல் மக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்கு தலைமை செயலகத்தில் மருத்துவ குழுவுடன் தலைமை செயலாளர் ராஜூவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

ALSO READ  மத்திய அரசுடன் பேச்சு வார்த்தைக்கு தயார் : வேளாண் சங்க தலைவர் அறிவிப்பு

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி போடுவதை வேகப்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

TNPSCன் அதிரடி மாற்றங்கள்.

naveen santhakumar

“காவல்துறையினர் தான் ரியல் ஹீரோ”…. போலீசாரிடம் ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் சூரி.

naveen santhakumar

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20.62 லட்சம் பேர் விண்ணப்பம்  

News Editor