தமிழகத்தில் 13ஆம் தேதி பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 12ஆம் வகுப்புக்கு வருகிற 13ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கு 14ஆம் தேதியும், 10ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 6ஆம் தேதியும் அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க மின்வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் தேர்வெழுதும் போது மின்தடை ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடுகள் எடுக்கவும், மாணவர்கள் படிக்க ஏதுவாக இரவு நேரங்களில் மின்தடை செய்யக்கூடாது எனவும் அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் டிரான்ஸ்பார்மர் உள்ளிட்டவற்றில் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.