சென்னை:
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது தொடுக்கப்படும் பொய் வழக்குகளை சட்டரீதியாக எதிர் கொள்ள அதிமுக சார்பில் சட்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படுகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி.ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
இந்த ஆலோசனை குழுவில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தளவாய் சுந்தரம், மனோஜ் பாண்டியன், இன்பதுரை மற்றும் வழக்கறிஞர் பாலமுருகவேல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்
அதிமுக வில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டரகள் மீது ஆளும் கட்சியினரின் தூண்டுதலால், பழிவாங்கும் எண்ணத்தோடு பொய் வழக்குகள் போடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிமுக கட்சிப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும், அல்லும் பகலும் அயராத ஈடுபட்டு வரும் அனைவருக்கும் அதிமுக என்றென்றும் பாதுகாப்பு அரணாகத் திகழும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி.இருவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.