இந்தியா தமிழகம் லைஃப் ஸ்டைல்

தொடங்கியது காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

444 பணியிடங்களுக்கான காவல் உதவி ஆய்வாளருக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் இன்று(25.06.2022) தொடங்கியது.

தமிழகம் முழுவதும் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வுக்கு ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் உட்பட 2 லட்சத்து 21 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் எழுத்து தேர்வு இன்று(ஜூன் 25) காலையும், மாலையும் தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வில் காவல்துறையில் வேலைசெய்பவர்களுக்கு 20 சதவீதம் இட ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  Pinup Wager Türkiye'deki Bahis Ve Casin

இதனையடுத்து இவர்களுக்கு நாளை எழுத்து தேர்வும், தமிழுக்கான தகுதி தேர்வும் தனியாக நடைபெறும் என்றும் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெறவுள்ள 197 இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கம்:

naveen santhakumar

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழக அரசு !

News Editor

கொரோனா மையங்களாக மாறிய கல்லாரிகளை……மீண்டும் கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு:

naveen santhakumar