தமிழகம்

தூக்கு போடுவது குறித்து விளக்கமளித்த புதுமாப்பிள்ளை பலி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரையில் தூக்கு போடுவது எப்படி என விளையாட்டாக செய்து காண்பித்த புதுமாப்பிள்ளை கயிறு இறுக்கியதில் பரிதாபமாக இறந்தார்.

மதுரையில் லாரி நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் சோலையழகுபுரத்தை சேர்ந்த முகமது அலி. இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த திருமண வாழ்க்கையில் திடீரென ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த முகமது அலி வீட்டில் இருந்த கயிறை எடுத்து எப்படி தூக்கு போடுவது என்பது குறித்து விளக்கமளித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

ALSO READ  மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு? முதல்வர் ஆலோசனை!

இதில் எதிர்பாராதவிதமாக நாற்காலி நழுவியதால் முகமது அலி தூக்குக் கயிற்றில் மாட்டிக்கொண்டார்.

இதில் அவரது கழுத்து இறுகி பரிதாபமாக உயிரிழந்தார். விளையாட்டாக செய்த காரியம் கடைசியில் புதுமாப்பிள்ளைக்கு வினையாக அமைந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பள்ளிகளில் மதிய உணவு திட்டம் ஐந்தாண்டு நீட்டிக்க ஒப்புதல்..!!

Admin

சசிகலா தமிழக வருகை; இரண்டு கார்கள் எரிந்து நாசம் !

News Editor

ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புக் நடைமுறையில் மாற்றம்.

naveen santhakumar