நாட்டின் பல்வேறு இடங்களில் மக்களின் உயிரை காவு வாங்கி வரும் கொரொனா வைரஸ் இளம் பெண்ணின் கற்பை காப்பாற்றி உள்ளது.
சீனாவின் யுவான் நகரில் கொரொனா வைரஸ் உருவானது.. இந்த வைரஸ் அந்நாடு மட்டுமின்றி மற்ற நாடுகளையும் பாதித்து வருகிறது.
இதுவரை 361க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 17,000 பேருக்கு இந்த வைரஸின் தாக்கம் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் இளம் பெண் ஒருவரை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.. அந்த இளைஞரிடம் இருந்து தப்பிக்க இளம்பெண் தந்திரமாக ஒரு பொய்யைச் சொல்லியுள்ளார்.
வுகான் நகரத்தில் இருந்து அப்போதுதான் அந்தப் பெண் திரும்பி உள்ளதாகவும்..கொரொனா வைரஸின் அறிகுறி அந்தப் பெண்ணிடம் உள்ளதாகவும் இளைஞரை பயமுறுத்தி உள்ளார்.
இதனைக் கேட்டு பீதியடைந்து இளைஞன் அப்பெண்ணை விட்டு தப்பித்து ஓடிவிட்டார்.இச்சம்பவம் பற்றி இளம்பெண் சீனாவில் உள்ள உள்ளூர் ஊடகங்களுக்கு கூறவே இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது..