தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கொழும்புவில் ஒரே பாதையில் ஒரு ரயில்கள் பயணித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இலங்கை தலைநகர்கொழும்புவில் இருந்து பதுளை நகர் நோக்கில் ரயில் ஒன்று புறப்பட்டது.இந்த ரயில் கல்பொட ரயில் நிலையத்தில் இருந்து வட்டவிளை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேசமயம் வைஸ்ராய் ரயில் நிலையத்தில் இருந்து மற்றொரு ரயில் ஒன்று வட்டவிளை நோக்கி வந்துள்ளது.
ஒரேபாதையில் இருரயில்களும் வருவதை கண்ட ரயில் ஓட்டுநர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இரு ரயில்களிலும் பயணித்த பயணிகள் அனைவரும் பீதியில் உறைந்தனர்.
ஆனால் ரயில் ஓட்டுநர்களின் சாமர்த்தியத்தால் 10 அடி இடைவெளியில் ரயில் நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.