சீனாவில் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களை எரிப்பதற்காக 49 24 மணிநேர சுடுகாடுகள் இயங்கி வருகின்றன.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரொனா வைரஸ் நாடு முழுவதும் பெரும் பீதியை கிளப்பியுள்ளது. தினம் தினம் சீனாவில் உயிரிழப்புகளை பார்த்தால், இதற்கு முன்னால் பரவிய சார்ஸ் நோயை விட இந்த நோய் எவ்வளவு பயங்கரமானது என்பது தெரியும்.
கொரொனா வைரசால் இதுவரை 1100 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இறந்தவர்களின் உடலை எரிப்பதற்காக வுஹான் நகரில் 24 மணி நேரமும் இயங்கும் சுடுகாடுகள் திறக்கப்பட்டுள்ளன.49 சுடுகாடுகளில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,200 பிணங்கள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 17 நாட்களுக்கு மேலாக அங்கு ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும் பலி எண்ணிக்கை கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் சீனா முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.