சினிமா

யோகி பாபு மீது முடிதிருத்தும் தொழிலாளர்கள் கமிஷனரிடம் புகார் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

யோகிபாபு தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து வருகிறார். இவர் அஜித், விஜய், ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இவர் கதாநாயகனாக நடித்த மண்டேலா படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் மாடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். பாலாஜி மோகன் தயாரிப்பில் நேரடியாக டி.வியில் வெளியான படம் நடப்பு அரசியலை பேசியுள்ளது. 

ALSO READ  நடிகை 'ஷ்ரத்தா ஸ்ரீநாத்' புதிய படம் பூஜையுடன் துவக்கம் !

இப்படத்தில் நடிகர் யோகிபாபு சலூன் கடைக்காரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தினர் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் யோகிபாபு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அந்த புகாரில் கூறியுள்ளதாவது, “நடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா திரைப்படம் அண்மையில் வெளியானது அந்த படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது படம் முழுவதும் இதுபோன்ற காட்சிகள் உள்ளன முடிதிருத்தும் மற்றும் மருத்துவ சமயத்தை சேர்ந்த 40 லட்சம் மக்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் தயாரிப்பாளர் தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

ALSO READ  முதல் நாளில் தடுமாறிய இந்தியா… 2வது நாளில் மீளுமா?

#yogibabu #Tamilthisai #tamilcinema #CInema #cinematrending #kollywood #Mandela #ActorYogibabu


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அட்லியின் அடுத்த படத்திற்கு நாயகியா பிரியா?

Admin

முதல் முறையாக லிங்குசாமியுடன் படத்தில் இணையும் பிரபலம் !

News Editor

விஜய் சேதுபதியை புகழ்ந்த த்ருவ் விக்ரம் !

News Editor