பெய்ஜிங்:-
கொரோனா வைரஸுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் வகையில் சீன மாமிச சந்தைகளில் பாம்பு, நாய், வெளவால்கள் என விற்பனை மீண்டும் தொடங்கியுள்ளன.
சீனாவில் ஹூபே மாகாணத்தில் சுமார் 90 லட்சம் பேர் வசிக்கும் வூஹான் நகரில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து வூஹான் நகருக்கு செல்லவும், வெளியேறவும் சீன அரசு தடை விதித்தது.
அதோடு நாய், பூனை, வௌவால் போன்றவாற்றின் மாமிசங்களை விற்பனை செய்யவும் உண்ணவும் தடை விதித்தது.
இந்த வூஹான் சந்தையை கடை வைத்திருந்த பெண்மணி ஒருவரே உலகின் முதல் கொரோனா நோயாளி என சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இவர் போன்ற பலருக்கு கொரோனா பாதிப்பு ஒரே நேரத்தில் கண்டறியப்பட்டதால், அந்த முதல் நபர் யார் என்பது தொடர்பில் சீன அரசாங்கம் ரகசியம் காத்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது 2 மாத ஊரடங்கிற்கு பிறகு சீனாவில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து உள்ளது.
ஹூபே மாகாணத்தில் தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளது எனவும் கூறப்படுகிறது. இதன் ஒருபகுதியாக குயிலினில் அமைந்துள்ள உட்புற சந்தைக்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் திரண்டிருந்தனர்.