உலகம்

இறந்துவிட்டதாக நினைத்த நபர் பிணவறையில் எழுந்ததால் அதிர்ச்சி:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கென்யா :

கென்யாவில் வசித்து வருபவர் பீட்டர்(32) என்பவர் வீட்டில் திடீரென நிலைகுலைந்து விழுந்ததால் உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து பீட்டரின் உடல் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

இந்நிலையில் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு உடலை பதப்படுத்துவதற்காக ஊழியர்கள் அவருடைய காலில் கத்தியால் கீறி உள்ளனர். அப்போது அலறிக்கொண்டு பீட்டர் எழுந்தார்.அதனை கண்டு அங்கிருந்த ஊழியர்கள்  அதிர்ச்சியடைந்து அலறியுள்ளனர்.இதையடுத்து அவரை மீண்டும் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி அங்கு முதலுதவி அளித்துள்ளனர். 

ALSO READ  யூடியூப் சேனலில் மதிப்பீடு செய்து ஆண்டுக்கு 185 கோடி சம்பாதிக்கும் சிறுவன்...

உண்மையிலேயே பீட்டர் இறந்து விட்டாரா…. இல்லையா…. என்பதை பார்க்காமல் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.இந்நிலையில் அவரது உறவினர்கள் இதற்கு காரணமான மருத்துவமனை மீது வழக்கு தொடர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவை மீண்டும் சீண்டிய டிரம்ப்; கொரோனாவை ‘Kung flu’ என அழைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!.. 

naveen santhakumar

கொரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கான புதிய மருந்து கண்டறியப்பட்டுள்ளது

News Editor

நடுக்கடலில் சர்வதேச விமான நிலையத்தை சாத்தியப்படுத்தியது ஜப்பான்

Admin