கென்யா :
கென்யாவில் வசித்து வருபவர் பீட்டர்(32) என்பவர் வீட்டில் திடீரென நிலைகுலைந்து விழுந்ததால் உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து பீட்டரின் உடல் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு உடலை பதப்படுத்துவதற்காக ஊழியர்கள் அவருடைய காலில் கத்தியால் கீறி உள்ளனர். அப்போது அலறிக்கொண்டு பீட்டர் எழுந்தார்.அதனை கண்டு அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து அலறியுள்ளனர்.இதையடுத்து அவரை மீண்டும் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி அங்கு முதலுதவி அளித்துள்ளனர்.
உண்மையிலேயே பீட்டர் இறந்து விட்டாரா…. இல்லையா…. என்பதை பார்க்காமல் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.இந்நிலையில் அவரது உறவினர்கள் இதற்கு காரணமான மருத்துவமனை மீது வழக்கு தொடர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.