லண்டன்:
யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கிடையே நடைபெற்றது
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (Euro) போட்டி, கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கியது. 24 நாடுகளை சேர்ந்த அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றன.
இந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டி வரை வந்துள்ளது என்பவது குறிப்பிடத்தக்கது.
இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் லூக் ஷா, போட்டி தொடங்கிய 2 நிமிடத்திற்குள் முதல் கோல் அடித்தார். யூரோ சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், மிகக் குறைந்த நேரத்தில் அடிக்கப்பட்ட கோல் இதுவேயாகும்.
இரண்டாவது பாதி ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் லியோனர்டோ போனுக்சி கோல் அடித்து அசத்தினார். 1-1 என்ற கோல் கணக்கில் சமமானது. எனவே ஃபெனாலிட்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.
கிடைத்த வாய்ப்பில் இத்தாலி அணி 3 கோல்களும், இங்கிலாந்து அணி 2 கோல்களும் அடிதார்கள். யூரோ கால்பந்து கோப்பையை இத்தாலி வென்றது. இதன் மூலம், இரண்டாவது முறையாக, இத்தாலி அணி வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதோடு 53 வருட கனவை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும் .