உலகம் விளையாட்டு

எப்படி வௌவால், நாய், பூனைனு எல்லாத்தையும் உண்ணுகிறீர்கள் ..! சீனர்கள் மீது பாய்ந்த அக்தர்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் வூஹானில் உள்ள சந்தையில் இருந்து உருவாகி பல நாடுகளுக்கும் பரவி உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தரும் சீனா மீது குற்றம்சாட்டி தனது ஆதங்கத்தை வெளிபடுத்தி உள்ளார்.

வழக்கம் போல் தங்கள் மீதான புகாரை சீனா மறுத்து அமெரிக்க ராணுவத்தை குற்றம்சாட்டி வருகிறது. அந்நாட்டு மக்களின் உணவு பழக்க முறை காரணமாகவே இந்த உயிர்கொல்லி வைரஸ் பரவியதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் கொரோனாவை பரப்பியதன் மூலம் சீனா உலகத்தையே பணயம் வைத்துள்ளதாக அக்தர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சீனர்களை கடுமைமாக சாடும் வகையில் பேசியுள்ளிர் அக்தர்.

ALSO READ  3வது ஒருநாள் போட்டி…ஆறுதல் வெற்றிக்கு தயாராகும் இந்தியா…
Courtesy

அவர் கூறியதாவது:-‌

எனக்கு புரியவில்லை நீங்கள் ஏன் வெளவால்கள் போன்றவற்றை சாப்பிடுகிறீர்கள், ஏன் அவற்றின் ரத்தம், சிறுநீர் போன்றவற்றை குடித்து கொடிய உயிர்கொல்லி வைரஸ்களை உலகம் முழுவதும் பரப்புகிறீர்கள். எனக்கு சுத்தமாக புரியவில்லை நீங்கள் ஏன் வவ்வால் நாய் பூனை போன்றவற்றை உண்கிறீர்கள். உண்மையில், உங்களின் உணவு பழக்கத்தினால் நான் மிகவும் கோபமாக இருக்கிறேன்.

ஒட்டு மொத்த உலகமும் உங்களின் மோசமான உணவு பழக்கத்தால் ஆபத்தின் பிடியில் உள்ளது. உலகம் முழுவதும் சுற்றுலாத் தொழிலும், பொருளாதாரமும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை கூறுவதால் நான் சீன மக்களுக்கு எதிரானவன் அல்ல. இது போன்றவற்றை உண்பது சீனர்களின் கலாச்சாரமாக இருக்கலாம். ஆனால் தற்போதைய சூழலில் அது உங்களுக்கு பலன் தரவில்லை. மனித குலத்தையே நாசமாக்கி வருகிறது.

ALSO READ  கொரோனாவால் பலியான தாயின் இறுதிசடங்கில் மகள் பலி...

சீன உணவுகளை புறக்கணிக்க சொல்லவில்லை. ஆனால் எதை சாப்பிட வேண்டும் சாப்பிட கூடாது என்பதை பற்றிய ஒரு தெளிவு வேண்டும். நீங்கள் எல்லா நேரத்திலும், எல்லாவற்றையும் சாப்பிட முடியாது என்பதை உணர வேண்டும் என பொரிந்து தள்ளியுள்ளார் அக்தர்.

முன்னதாக சீன அரசு நாய், பூனை, வவ்வால், பாம்பு போன்றவற்றை மக்கள் உண்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வவ்வால் மற்றும் பாம்பை உண்டதால் தான் இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜெர்மனியில் மீண்டும் எழுச்சி பெற்ற இடதுசாரிகள் – 16 வருடத்திற்கு பின் அரசியல் மாற்றம்

News Editor

சுத்தம் செய்யப்படாத ஏ.சி: புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம்- ஆராய்ச்சி முடிவுகள் …!

naveen santhakumar

இந்த விலங்கில் தான் கொரோனாவை அழிக்கும் எதிர்ப்பு பொருட்கள் உள்ளதா..??

naveen santhakumar