உலகம் முழுவதும் தற்போது கோரோனா தான் ட்ரெண்டில் உள்ளது. சரி, இதற்கு அடுத்ததாக என்ன ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்று பார்த்தால் டல்கோனா காஃபி (Dalcona Coffee) உள்ளது.
இன்ஸ்டாகிராமில் இருந்து ட்விட்டர் டுவிட்டரில் இருந்து ஃபேஸ்புக் என இந்த காஃபி குறித்த புகைப்படங்கள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதுவரை காபி செய்வது எப்படி என்பது குறித்து யூ-ட்யூபில் பார்த்தோர் எண்ணிக்கை நான்கு மில்லியன்களை தாண்டியுள்ளது.
பெரும்பாலான உலக நாடுகள் தற்போது முழு ஊரடங்கில் உள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே அடைபட்டுக் கிடக்கின்றனர். இதனிடையே இந்த காஃபி குறித்து இணையத்தில் தேடி வருகின்றனர்.
அதோடு இதன் ஸ்பெஷல் என்னவென்றால் இதை சுலபமாக வீடுகளில் தயாரிக்கலாம் என்பதுதான். எனவே குவாரண்டின் காலத்தில் வீடுகளில் உள்ள மக்கள் இந்த டல்கோனா காஃபியை தங்கள் வீடுகளிலேயே வீடுகளில் எவ்வாறு செய்வது என்பது குறித்து பார்ப்போம்.
இந்த டல்கோனா காபி ஒரு தென்கொரிய கண்டுபிடிப்பு.
இந்த காஃபியை வெறும் பத்தே நிமிஷத்துல செஞ்சிடலாம்.
தேவையான பொருட்கள்:-
இரண்டு டேபிள் ஸ்பூன்- சர்க்கரை.
இரண்டு டேபில் ஸ்பூன்- காபி பவுடர்.
இரண்டு டேபிள் ஸ்பூன்- தண்ணி.
அரை கப் பால்.
சர்க்கரை, காபி பவுடர், வெந்நீர் மூன்றையும் ஒரு பௌலில் போட்டு நன்கு கலக்கவும்.
பின் ஸ்டிர்ரர் கொண்டு 15 நிமிடங்கள் நல்ல கீரீம் மாதிரி மிக்ஸ் செய்து கொள்ளவும்.
இப்போது, நல்ல குளிர்ந்த பாலில் மேலே ஐஸ் கியூப்ஸ் போட்டு, கலக்கிய கீரிமை மேலே வைத்தால் கலக்கல் டல்கோனா காஃபி ரெடி.