தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
நியூயார்க்:
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா பெரும்பான்மை ஆதரவுடன் 6-வது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நியூயார்க்கில் நடைபெற்றது.
ஜனநாயக மற்றும் பன்முக தன்மை கொண்ட நாடான இந்தியா அடிப்படை மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதர் மூர்த்தி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்தியா 2024-ம் ஆண்டு வரை மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.