தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
நேரலையில் நிருபரை துரத்திய பன்றி – வைரலாகும் வீடியோ
கிரீஸ் நாட்டில் செய்தியாளர் ஒருவர் நேரலையில் இருந்தபோது, அவரை தகவல்களை தர விடாமல் காட்டுப் பன்றி துரத்திய சம்பவம் வைரலாகி வருகிறது.
கிரீஸ் நாட்டின் கினெடா நகரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து செய்திகளை அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றில் லாஸோஸ் மன்டிகோஸ் என்ற செய்தியாளர் நேரலையில் இணைந்து தகவல்களை கொடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த காட்டுப் பன்றி ஒன்று அவரைத் துரத்தியது. இதனால் மிரண்டு போன அவர் அதனை விட்டு நகர முயல்வார். ஆனாலும் காட்டுப் பன்றி அவரை விடாமல் துரத்தியது.
இந்தக் காட்சிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனை செய்தி அறையில் இருந்த செய்தியாளர்களும் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர். தற்போது, அந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது..
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.