உலகம்

பாகிஸ்தானில் 14 பேர் மரணம்- பலர் மருத்துவமனைகளில் அனுமதி.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கராச்சி:-

பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்திலுள்ள கியாமாரி துறைமுகத்தில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக, இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கியாமாரி வர்த்தகம் மற்றும் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு கடந்த சில நாட்களாக பலர் சுவாசகோளாறு, கண் எரிச்சல் காரணமாக மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ALSO READ  திருடியவரிடமே பொருட்களை திருப்பி கொடுத்த திருடர்கள்… 

இது தொடர்பாக சுகாதாரத் துறை செய்தி தொடர்பாளர் ஸாஃபர் மெஹ்தி கூறுகையில்:-

இதுவரையில் 250 பேர் வரை பல்வேறு மருத்துவமனைகளில் 14 பேர் வரையில் இறந்துள்ளனர்,250 நபர்கள் வரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் பலர் சுவாச கோளாறு, மூச்சுதிணறல், கண் எரிச்சல் பிரச்சனைகளால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தொடந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது என, ஜின்னா மருத்துவ மைய அவசர பிரிவு தலைவர் சீமின் ஜமாலி கூறினார்.

ALSO READ  'பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது' - பாஜக…!

இதற்கிடையே, எங்கள் துறைமுகம் பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் உள்ளது. எங்கள் துறைமுகத்திலிருந்து எந்த வாயு கசிவும் ஏற்படவில்லை என இந்த புகாரை கியாமாரி துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள்….

naveen santhakumar

பாட்டியை கட்டிபிடிக்க சுமார் 2800கி.மீ நடந்து சென்ற சிறுவன்:

naveen santhakumar

அண்டவெளியில் வெப்ப பொருளை உமிழும் கருந்துளையை கண்டறிந்த விஞ்ஞானிகள்…

naveen santhakumar