தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
திருவண்ணாமலை:-
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சரக்கு கிடைத்த மகிழ்ச்சியில் பாட்டி ஒருவர் பாட்டு பாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் நிபந்தனையுடன் மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டன. இதில் அதிகாலை முதலே குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/05/IMG-20200507-WA0120.jpg)
பல இடங்களில் கைத்தட்டியும், ஆடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, சில இடங்களில் வழக்கம் போல பிரச்சனை ஏற்பட்டது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/05/IMG-20200507-WA0072.jpg)
இதில் ஒருபடி மேலே போய் ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக்கில் மது வாங்கிய பாட்டி ஒருவர், அதனை குடித்துவிட்டு போதையில் பாட்டு பாட தொடங்கியுள்ளார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/05/IMG-20200507-WA0118.jpg)
இதனை கண்ட மற்ற அனைவரும் ரசித்து கேட்க சிலர் இணையத்தில் வீடியோவை பதிவிட்டு பாட்டியுடன் இன்றைய நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.