வருகின்ற செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 565 சுங்கச்சாவடிகளில் தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. வழக்கமாக ஆண்டுக்கு ஒரு முறை சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/08/IMG-20200822-WA0002.jpg)
இதையடுத்து, வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது. 5% முதல் 10% சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படும் என்று உயர் அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் செயல்பட்டுவரும் சுங்கச்சாவடிகளில் ஏற்கனவே ஏப்ரல் 1ஆம் தேதி கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/08/IMG-20200822-WA0000.jpg)
கொரோனா ஊரடங்கு உத்தரவால் சுங்கச்சாவடிகள் மூடப்பட்டிருந்த நிலையில், கட்டணம் உயர்வு ஏப்ரல் 16ஆம் தேதிக்கு அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுள்ளது. சுங்கக் கட்டண உயர்வால் காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரும் என மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் சாமானிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் அமைகிறது.