தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் கடந்த 2 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்கிய நிலையில், இன்று ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிப்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டிருந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசரச் சட்டத்தின் மூலம் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்த அரசாணையை சட்டமாக்குவதற்கான மசோதாவை துணை முதல்வர் ஓபிஎஸ் தாக்கல் செய்தார். தடையை மீறி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 5 ஆயிரம் அபராதம், 6 மாதம் சிறை தண்டனை கொடுக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.