சினிமா

பாக்கியராஜின் “முந்தானை முடிச்சு”; 37 ஆண்டுகளுக்கு பிறகு ரீமேக் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 1983 ஆம் ஆண்டு பாக்கியராஜ் இயக்கியும் நடித்தும் இருந்த திரைப்படம் முந்தானை முடிச்சு .இப்படத்தில்  ஊர்வசி, தீபா, சத்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏ.வி.எம். ஸ்டுடியோ தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது. மேலும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகிய அனைத்தும் பாக்கியராஜ் எழுந்திருந்தது. குறிப்பிடத்தக்கது. 

ALSO READ  பிரபாஸ் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்…. 

இந்த படம் வெளியாகி 37 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் முந்தானை முடிச்சு படத்தை தற்போது ஜே.எஸ்.பி நிறுவனம் ரீமேக் செய்யவுள்ளது. இதில் நடிகர் சசிகுமார் பாக்கியராஜ் கதாபாத்திரத்திலும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஊர்வசி கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர்.

இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகரன் இப்படத்தை இயக்கவுள்ளார். இவர் சசிகுமார், லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்ற சுந்தரபாண்டியன் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களது கூட்டணியில் கொம்பு வச்ச சிங்கம் டா படம் வெளியீட்டுக்கு  தயாராவுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியில் ரீமேக்காகும் பல விருதுகள் பெற்ற தமிழ்ப்படம்!

News Editor

நடிகர் சத்யராஜுக்கு கொரோனா தொற்று உறுதி!

naveen santhakumar

2019 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரைகள்!!!

Admin