இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 18 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். இதுவரை 11 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் பாதித்துள்ளது. 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். 

ALSO READ  பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,327 பேருக்கு 

ALSO READ  புத்தாண்டு நள்ளிரவு முதல் ரயில் கட்டணம் திடீர் உயர்வு:ரயில்வே பாதுகாப்பு படை பெயர் மாற்றம்
கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 108 பேர் இந்த நோய் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய் தொற்றில் இருந்து 14,234 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த வாரம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த  கொரோனா  பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்க தொங்கியுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டெல்டா வகை கோவிட்டையும் எதிர்க்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி

naveen santhakumar

10,000 படுக்கைகள்; சீனாவை விட பத்து மடங்கு பெரிய மருத்துவ வளாகத்தை அமைத்த இந்தியா… 

naveen santhakumar

நீட் தேர்வில் மோசடி …. 35 லட்சத்திற்கு விற்கப்பட்ட வினாத்தாள்!!!….

Admin