அரசியல்

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி தான் அமையும்; ஜான் பாண்டியன் நம்பிக்கை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து அரசியல் காட்சிகள் தேர்தல் அறிக்கை, பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு என தீவிரமாக இயங்கி வருகிறது. அந்தவகையில் விருதுநகர் மாவட்ட அதிமுக வேட்பாளர் வைகை செல்வனை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் பரப்புரை மேற்கொண்டார்.

ALSO READ  கமல் தலைமையிலான மூன்றாவது அணியில் இணைகிறதா மதிமுக ; வைகோ விளக்கம் !

அப்போது பேசிய அவர், தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றும்போது, நாடாளுமன்றத்தில் இருந்து 38 திமுக எம்பிக்களும் வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாது, தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கும் திமுக எதிரி. அமைதியான முறையில் அதிமுக நல்லாட்சி அளித்து வருவதாக கூறிய ஜான் பாண்டியன், மீண்டும் அதிமுகதான் ஆட்சி அமைக்கும் என்று கூறினார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதல்வர் ஸ்டாலினின் முதல் 5 கையெழுத்து !

News Editor

பஞ்சாபில் நெருங்கும் தேர்தல் முதல்வருக்கு எதிராக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போர்க்கொடி…

News Editor

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி பயணம்?

Shanthi