தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து அரசியல் காட்சிகள் தேர்தல் அறிக்கை, பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு என தீவிரமாக இயங்கி வருகிறது. பாஜக சார்பில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அண்ணாமலை அதன் சுற்று வட்டார பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த அவர், இஸ்லாமிய சமூகத்தினருக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். தொடர்ந்து வாக்காளர்களிடம் பேசிய அண்ணாமலை, காங்கிரஸ் ஆட்சியில்தான் மத அரசியல் கொண்டு வரப்பட்டு மதக் கலவரங்கள் நடந்ததாகக் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் மதக் கலவரங்கள் குறைந்துள்ளதாகவும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்தார்.
#ADMK #TamilThisai #DMK #BJP #BJPTamilnadu #Tamilnadu #TNelection #TNelection2021 #AIADMK #Annamalai #AnnamalaiIPs