சினிமா

‘வாளோடு வலம் வரும் சூர்யா’; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்  !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவரின்  நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சூரரைப் போற்று’. ஓடிடி தளத்தில் வெளியாகியது. அதனையடுத்து இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ‘சூர்யா 40’ எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளார். இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Priyanka Mohan

சூர்யா 40 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் பலர் நடிக்கவுள்ளனர். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

ALSO READ  நடிகர் விஜய்க்கு ஜார்ஜியாவில் உற்சாக வரவேற்பு !

இந்நிலையில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சூர்யாவின் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் சூர்யா கையில் வாளோடு வெட்டி சட்டை அணிந்து மாஸாக தோன்றியுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சனம்-தர்ஷன் வழக்கு….தர்ஷனுக்கு நிபந்தனை ஜாமீன் :

naveen santhakumar

‘பாகுபலி’ மற்றும் ‘கே.ஜி.எஃப்’ படக்குழுவினருடன் இணையும் சுருதிஹாசன் ! 

News Editor

கொரோனாவால் பாதித்த நடிகை படப்பிடிப்பிற்கு சென்றதால் அதிர்ச்சி !

News Editor