தமிழகம்

விருதுநகரில் பரபரப்பு; காய்ச்சலால் பெண் காவலர் மரணம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்தவர் பெண் காவலர் கனிமுத்து. கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் விடுமுறையில் இருந்தார். இந்நிலையில் மூச்சு திணறல் அதிகமாகி விருதுநகர் காவலர் குடியிருப்பு அருகே உள்ள அவரது வீட்டில் மரணமடைந்துள்ளார்.

பெண் காவலருக்கு கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில்  11 வயதில் ஒரு  பெண் குழந்தை உள்ளது. தனது தகப்பனார் ஆதரவுடன் இருந்து வந்த நிலையில் இன்று காலை மூச்சு திணறல் அதிகமாகி விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக   உயிரிழந்தார்.

மூச்சுத்திணறல் பிரச்சினை இருந்ததால் அதற்கு மருத்துவம் பார்த்து மாத்திரை உட்கொண்டு வந்ததால்  கொரோனா பரிசோதனை எடுக்காமல் இருந்துள்ளார்.அனைவரிடமும் அன்பாக பழகக் கூடிய பெண் காவலர் கனிமுத்து உயிரிழந்த சம்பவத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

ALSO READ  2021-ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் பட்டியல் வெளியீடு : அம்பேத்கர் சுடர் விருது - மு.க.ஸ்டாலின் பெரியார் ஒளி விருது - வைகோ பெறுகின்றார்கள்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சாத்தான்குளம் மரணம்: ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினி ஆறுதல்… 

naveen santhakumar

அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு:

naveen santhakumar

ஆகஸ்ட் 25 அன்று விவசாயிகளைச் சந்திக்க பா ஜா க முடிவு

News Editor