இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கி தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு 15 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நோயினால் 32 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,82,815 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கு 3,780 பேர் உயிரிழந்துள்ளனர். 3,88,289 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்திருந்தது. நேற்று சற்று குறைந்திருந்த கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.