தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:
கடந்த 2 மாதங்களாக பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து விழுப்புரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேரறிவாளனுக்கு ஏற்பட்ட சிறுநீரக தொற்று காரணமாக திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதால் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது .
இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பேரறிவாளனுக்குக் கடந்த இரண்டு மாதங்களாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பரோல் காலம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.