உலகம்

சீக்கிரம் போய் தடுப்பூசி போடுங்க இல்லாட்டி அபராதம் 15000 ரூபாய் கட்டணும்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:

உலகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்தது வருகிறது. பல கோடி மக்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்துள்ளனர். பல லட்சக்கணக்கானோர் இன்னும் கொரோனா தொற்றில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இதற்கு மாற்று என்பது கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்பதே இப்போதைய நிலை. வளர்ந்த நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்ததன் விளைவுவாக பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது.

ALSO READ  75வது சுதந்திர தின நினைவுத் தூண் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்

இந்நிலையில் மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள தயங்கி வருகின்றனர். இந்தியாவில் இன்னும் பெருமளவு மக்கள் தடுப்பூசி போடாத நிலையே உள்ளது. அரசுகளும் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

நகர பகுதிகளில் 60 சதவிகிதம் மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். கிராமப்புற பகுதிகளில் மிகுந்த தேக்க நிலையே உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பணியாளர்களின் சம்பளத்தில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ALSO READ  பிலிப்பைன்ஸ் நாட்டின் கலடாகன் பகுதியில் கடும் நிலநடுக்கம் :
Covid-19 impact: Delta Air Lines grounds nearly 600 aircraft

இந்நிறுவனத்தில் கொரோனா தொற்றில் பாதித்த பணியாளரின் மருத்துவ சிகிச்சைக்கு 37 லட்சம் ரூபாய் செலவாகிறது. எனவே தான் மாதம் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக டெல்டா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலை இந்தியாவிலும் ஏற்பட்டுவிடாமல் இருக்க இன்றே கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள செல்லுங்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெண்களை துண்டு துண்டாக வெட்டிக்கொலை செய்த ‘ட்விட்டர் கில்லர்’ 

News Editor

இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்; இந்திய பெண்மணி உயிரிழப்பு !

News Editor

ரஷ்யாவில் விமான விபத்து பயிற்சியில் ஈடுபட்ட 16 வீரர்கள் மரணம்

News Editor