தமிழகம்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 27 ஆயிரம் பிரதிநிதிகள் நாளை பதவியேற்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 27 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் நாளை பதவியேற்க உள்ளனர்.

வரும் 22ம் தேதி தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில்

தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அக்.6 மட்டும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

தமிழகத்தில் மொத்தம் 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சிகளில் 153 வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியங்களில் 1421 வார்டு கவுன்சிலர்கள், 3007 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், இந்த கிராம பஞ்சாயத்துக்களில் 23,211 வார்டு உறுப்பினர்கள் ஆக மொத்தம் 27,792 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

ALSO READ  திருச்சி அருகே போதைப்பொருள் கடத்தியதற்காக பிஜேபி பிரமுகர் ஹூண்டாய் காரோடு பிடிபட்டார்
Tamil Nadu local body election results: DMK forges ahead, AIADMK close  behind | Coimbatore News - Times of India

இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த வாரம் நடந்தது. இதையடுத்து, வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சான்றிதழ்கள் வழங்கினர். இந்நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அந்தந்த ஊராட்சிகளில் நாளை 20ம் தேதி பதவியேற்க உள்ளனர்.

ALSO READ  ஜனவரியில் விடுதலையாகிறாரா சசிகலா?????

நாளை பதவியேற்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வருகிற 22ம் தேதி நடக்கும் மறைமுக தேர்தலில் வாக்களிக்க உள்ளார்கள். 22ம் தேதி 9 மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், 9 மாவட்டங்களில் இடம் பெற்றுள்ள ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்கள், துணைத்தலைவர்கள், 3002 கிராம பஞ்சாயத்துகளில் துணைத்தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் 29சதவீதம் சாலை விபத்துகள் குறைவு: அமைச்சர் நிதின் கட்காரி

Admin

தொழிலாளர்களுக்கும் திமுகவிற்குமான உறவை யாராலும் அழித்து விட முடியாது..

Shanthi

தனியார் ஹோட்டலில் பெண் மருத்துவர்களுக்கு பாலியல் வன்கொடுமை – அரசு மருத்துவர்கள் 2 பேர் கைது

naveen santhakumar