தமிழகம்

பள்ளியில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு – 3 மாணவர்கள் படுகாயம் – பள்ளி வளாகத்திற்குள் எப்படி வந்தது?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிவகங்கை அருகே பள்ளி வளாகத்தில் டிபன் பாக்ஸ் வெடித்த விபத்தில், மாணவர்கள் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சிவகங்கை அருகே கீழக்குளம் கிராமத்தில் உள்ள தொடக்க பள்ளி அருகே உள்ள பாழடைந்த வளாகம் உள்ளது.

tiffan box 1

இங்கு கீழக்குளம் கிராமத்தை சேர்ந்த ராம்கிஷோர், நவீன்குமார், வைணவன் என்ற 3 சிறுவர்கள் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ஒரு டிபன் பாக்ஸ் ஒன்று இருந்ததை பார்த்த அவர்கள் அதை எடுத்து பார்த்துள்ளனர்.

ALSO READ  பாலியல் அத்துமீறல்; பாய்ந்தது போக்சோ - விரைந்தது 3 தனிப்படை…?

டிபன் பாக்ஸ் உள்ளே இருந்து சத்தம் வரவே, அதை திறக்க முயற்சித்துள்ளனர். ஆனால் டிபன் பாக்ஸை திறக்க முடியாமல் போகவே, சாலையில் அதை வீசி எறிந்து உடைக்க முயன்றனர்.

அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் டிபன் பாக்ஸ் வெடித்து சிதறியது. இதில் ராம்கிஷோர் என்ற சிறுவனுக்கு குடல் சரிந்து விழுந்ததில் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

ALSO READ  இலங்கை சுதந்திர தினவிழாவில் இனி தமிழில் தேசியகீதம் கிடையாது!

மற்ற 2 சிறுவர்களுக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பான தகவல் அறிந்த போலீசார், பள்ளி வளாகத்திற்குள் டிபன் பாக்ஸில் வெடிபொருள் வந்தது எப்படி என, சம்பவ இடத்தில் கிடந்த தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இம்மாத இறுதியில் பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடு???…

naveen santhakumar

மருத்துவக் கலந்தாய்விற்கு புதிய நடைமுறை அறிமுகம்..

Shanthi

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க அணைத்து கட்சிகளும் ஆதரவு !

News Editor