என் சொத்து மதிப்பு 1.5 லட்சம் கோடி.. ஆனால் கையில ஒண்ணுமே இல்லை.. எலன் மஸ்க் வேதனை..
பிரபல தொழிலதிபரான எலன் மஸ்க் பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அவர் தனது சொத்து மதிப்பு 1.5 லட்சம் கோடி, ஆனால் என் கையில் ரொக்கம் எதுவுமே இல்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
2018ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Vernon unsworth குறித்து எலன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சையை உண்டாக்கும் வகையில் பதிவிட்டிருந்தார்.
Vernon unsworth 2018 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி குகையில் மாட்டிக்கொண்டிருந்த 12 கால்பந்து வீரர்களை மீட்டதில் முக்கிய பங்காற்றியவர் .இதன் மூலம் அனைவருக்கும் பிரபலமானார்.பின்பு ஜூலை 15ம் தேதி Vernon unsworth பற்றி
எலன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சையாக பதிவிட்டிருந்தார்.
பின்பு எலன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தவறாகப் பேசியதற்கு Vernon unsworth-யிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார். சர்ச்சையை உண்டாக்கும் வகையில் எலன் மஸ்க் பேசிய வழக்கு விசாரணை தற்போது அமெரிக்காவில் , லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது .
அப்போது நீதிபதி எலன் மஸ்கிடம் உங்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று கேள்வி கேட்டிருக்கிறார்? அதற்கு பதில் அளித்த அவர் என் கையில் ரொக்கமாக பணம் இல்லை ஆனால் என்னிடம் 1.5 லட்சம் கோடி மதிப்பில் சொத்து இருக்கிறது என்று பதிலளித்துள்ளார் . இவரின் இந்த பதில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.