பொதுவாக திரைப்பட நட்சத்திரங்களின் வாரிசுகள் அதே துறையைத் தேர்வு செய்வதே வழக்கமாக இருக்கிறது. மோகன்லாலின் மகள் விஸ்மாயா பொதுவெளியில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாதவர்.
மலையாள உலகின் முன்னணி நட்சத்திரமாகத் திகழும் மோகன்லால் மகன் பிரனவ் தந்தையைப் போலவே திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவின்போது தந்தை, தாய் மற்றும் சகோதரருடன் விஸ்மாயாவும் பங்கேற்றார்.
இந்த நிலையில், தனக்கு இருக்கும் கவிதை எழுதும் ஆற்றல்,ஓவியத் திறமை பற்றி முதல்முறையாக வெளியில் தெரியப்படுத்தியுள்ளார். விரைவில் கவிதை மற்றும் ஓவியங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவிப்புச் செய்துள்ளார், விஸ்மாயா.
கிரைன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட் (Grains of Stardust) என்ற தலைப்பில் வெளியாகவுள்ள கவிதைப் புத்தகத்தின் அட்டைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
விஸ்மாயா புத்தகத்தின் அட்டைப் படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.