ஒரே பாட்டில் ஓஹோன்னு வாழ்க்கை இது யாருக்கு பொருந்துமோ இல்லையோ நம்ம ராஷ்மிகா மந்தனாவிற்கு பொருந்தும்.
தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’ படத்தின் ‘இம்கெம் இம்கெம்’ பாடல் மூலமாக தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா.
தற்போது நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
இந்நிலையில், எனக்கு அசைவம் என்றால் உயிர், ஆனாலும் அசைவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன் என்று நடிகை ராஷ்மிகா கூறியுள்ளார்.
இதுகுறித்து ராஷ்மிகா அளித்த பேட்டி வருமாறு:-
கடந்த 6 மாதங்களாக அசைவ உணவு சாப்பிடுவது இல்லை. எனக்கு அசைவம் என்றால் உயிர். ஆனாலும் முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். ஏனெனில் கதாநாயகி என்ற நட்சத்திர அந்தஸ்தில் நான் இருக்கிறேன். படிப்படியாக முன்னேறாமல் வந்ததுமே ஒரேயடியாக இந்த இடத்துக்கு வந்து விட்டேன். இதை இடத்தை தக்கவைக்கவும், தொடர்ந்து இந்த இடத்திலேயே நீடிக்கவும் நன்றாக நடித்தால் மட்டும் போதாது. உடல் தோற்றமும் நன்றாக இருக்க வேண்டும்.
இஷ்டத்துக்கு நாம் உணவை உள்ளே அனுப்பி எடை கூடிவிடும். எடை கூடினால் குறைப்பது கஷ்டம். எனவே சைவம்தான் சிறந்தது என்று முடிவு செய்தேன்.
வாழ்நாள் முழுவதும் இனி சைவமாகவே இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறேன் என கூறியுள்ளார்.