இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி 3.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில மாநிலங்களில் கொரோனா பரவல் கையை மீறி சென்றுள்ளதால் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பல நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காததால் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர்.
அண்மைக்காலமாக திரை பிரபலங்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்து வருகின்றனர். குறிப்பாக எஸ்.பி.பாலசுப்ரமணியன், தாமிரா, ரூபன் உள்ளிட்ட திரைபிரபலங்கள் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் மூடர்கூடம் படத்தின் இயக்குநர் நவீன் கொரோனா 2 வது அலை துயரோடு கலந்த அச்சத்தையும் கொடுத்துள்ளது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இரண்டாம் அலை சற்று பயங்கரமாகவே இருக்கிறது. முதல் அலையில் எனக்கு தெரிந்த நண்பர்கள் பலருக்கு கொரோனா வந்தது போனது. ஆனால் இரண்டாம் அலை எனக்கு நெருக்கமானோர் பலரின் உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. துயரோடு அதிகபடியான அச்சமும் கலந்தே இருக்கிறது. விழிப்புணர்வும் தைரியமும் தேவை.
இரண்டாம் அலை சற்று பயங்கரமாகவே இருக்கிறது. முதல் அலையில் எனக்கு தெரிந்த நண்பர்கள் பலருக்கு கொரோனா வந்தது போனது. ஆனால் இரண்டாம் அலை எனக்கு நெருக்கமானோர் பலரின் உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. துயரோடு அதிகபடியான அச்சமும் கலந்தே இருக்கிறது. விழிப்புணர்வும் தைரியமும் தேவை” என குறிப்பிட்டுள்ளார்.