தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும் இருக்கும் கே.வி.ஆனந்த மாரடைப்பால் காலமானார். 54 வயதாகும் இவருக்கு அண்மையில் உடல்நல குறைவு ஏற்பட்டது. அதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரைபிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் கே.வி.ஆனந்த் மறைவுக்கு இயக்குநர் சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,“கே.வி.ஆனந்த் மறைந்த செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். என் இதயம் கனக்கிறது. என்னால் இதை ஏற்க முடியவில்லை. அன்பு நண்பரை இழந்துவிட்டேன். ஒரு அற்புதமான ஒளிப்பதிவாளர், திறமையான இயக்குநர். இந்த இழப்பை ஈடுசெய்ய முடியாது. உன்னை மிஸ் செய்கிறேன் அன்பு நண்பா. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கிய முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட படங்களுக்கு கே.வி ஆனந்த ஒளிப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.