கடந்த 1991 ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் உருவாகிய படம் ஏன் ராசாவின் மனசிலே. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மீனா நடித்திருந்தார். அவரை தொடர்ந்து காமெடி நடிகர் வடிவேல் நடித்த இப்படத்தினை ராஜ்கிரண் தயாரித்தும் இருந்தார். மீனா மற்றும் வடிவேல் இப்படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினர்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2021/02/en-rasavin.jpg)
இதனையடுத்து “ஏன் ராசாவின் மனசிலே” படம் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. அனைத்து தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. அதனையடுத்து தற்போது பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் ராஜ்கிரண் ஏன் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தினை நடிகர் ராஜ்கிரண் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்கவுள்ளார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2021/02/large_rajkiranslider-35759-1200x630-1-1024x579.jpg)
இவர் இப்படத்தினை இயக்குவதால் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இதனை உறுதி செய்த நடிகர் ராஜ்கிரண் படத்தின் அதைகாரப்பூர்வமான அறிவிப்பையும் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2021/02/EtIHCXeUcAAKeMT.jpg)
அதில்,”இறைவன் அருளால் இன்று என் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மதுவின் 20 ஆவது பிறந்தநாள், இன்று ஏன் ராசாவின் மனசிலே 2 படத்தின் கதையை எழுதி முடித்துள்ளார். மேலும் திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கிறார். விரைவில் அந்த படத்தையும் இயக்கவுள்ளார் என்றும் என மகன் பல வெற்றி படங்களை இயக்க வேண்டும் அனைவரும் வாழ்த்துங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
#rajkiran #enrasavinmanasile #nainarmuhammed #tamilmovie #tamilcinema #enrasavinmanasile2 #tamilthisai