நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் கடைசியாக வெளியாகியபடம் ஓ மை கடவுளே. இந்த படம் வெளியாகி அணைத்து தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்புனை பெற்றது. இந்நிலையில் அனி.ஐ.வி.சசி இயக்கத்தில் அசோக் செல்வன் தீனி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நித்யா மேனன், ரீத்து வர்மா இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, திவாகர் மணி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் பிப்ரவரி 12 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தீனி படத்தின் டிரைலரில் நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக நேற்று வெளியிட்டிருந்தார். ட்ரெய்லரில் அதிக எடை கொண்ட தோற்றத்தில் அசோக் செல்வனைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். இந்த படத்திற்காக 103 கிலோ எடையை அதிகரித்து நடித்துள்ளதாக அசோக் செல்வன் கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் அசோக் செல்வன் இது குறித்து தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “என் இதயத்திற்கு மிக நெருக்கமான படம். நிறைய அன்பாலும் முயற்சியாலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக 103 கிலோவை ஏற்றி, அதைக் குறைக்க கிட்டத்தட்ட இறந்தே போய்விட்டேன். இந்தப் படம் மிகவும் சிறப்பு வாய்ந்த படம். அதற்கு உங்கள் அன்பும் ஆதரவும் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக .. எனது உயிர் நண்பன் அனி சசியின் அறிமுகப்படம். நித்யா மேனன், ரிது வர்மா, நாசர் போன்ற திறமை தொழிற்சாலைகளுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.