சினிமா

ஓ.என்.வி  விருது எனக்கு வேண்டாம்; கவிஞர் வைரமுத்து அறிக்கை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மலையாள இலக்கியத்தில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஓ.என்.வி. விருது. இவ்விருது மலையாள கலைஞர்களும் ஒருவரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி குறுப் அவர்களின் நினைவாக கடந்த 2017 ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

ஓ.என்.வி விருது அகில இந்திய அளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் தேசிய விருதாக கருதப்படுகிறது.  தற்போது இந்த விருது தமிழ் இலக்கியவாதி கவிஞர் வைரமுத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த விருது ஒரு சிலை மற்றும் ஒரு தகுதி பட்டயம் அத்துடன் 3 லட்சம் ரொக்க பணம் வழங்கப்படும். சிறந்த மலையாள படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இவ்விருது முதல் முறையாக மலையாளி அல்லாத இலக்கியவாதிக்கு கொடுப்பது இதுவே முறையாகும்.

கவிஞர் வைரமுத்துக்கு விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து திரைபிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை தங்களின் வாழ்த்துக்களை  தெரிவித்து வரும் நிலையில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அந்தவகையில் மலையாள நடிகை பார்வதி பாலியல் குற்றச்சாட்டு உள்ள   ஒருவருக்கு ஓ.என்.வி. பெயரில் விருது வழங்குவது அவமரியாதை என்று கூறியுள்ளார். மேலும் பல மலையாள பிரபலங்களும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இதனால், ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம் என ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் வைரமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது; நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன்.

ஆனால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருப்பதாய் அறிகிறேன். இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி குரூப்பையும் சிறுமைப் படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன்.அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன். 

ALSO READ  மீண்டும் காதலில் விழுந்தாரா..????? பிக் பாஸ் புகழ் ஓவியா :

ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்கிறேன். நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை. அதனால் திட்டவட்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன்; அதை மிகுந்த தெளிவோடும் அன்போடும் அறிவிக்கிறேன்.
ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் 3 லட்சத்தைக் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.

மற்றும் மலையாள மண்மீதும் மக்கள்மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத்தொகையாக ரூபாய் 2 லட்சத்தைக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன்.
தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும்.

இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னைப் பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும், ஊடக உறவுகளுக்கும் என் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட கிரிக்கெட் பயிற்சி வீடியோ….

naveen santhakumar

இயக்குனர் கே.வி ஆனந்த் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் !

News Editor

“ஜகமே தந்திரம்” படத்தின் அப்டேட்டை அறிவித்த படக்குழு…!

News Editor