புதுச்சேரி மாநில சட்டப்பேரவைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்ட மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமனம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் புதுச்சேரி மாநில சட்டபேரவை செயலகம் சார்பாக நடத்தப்பட்டது. இந்த முக்கிய பயிற்சி முகாமிற்கு சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தின் 4-வது மாடியில் உள்ள கருத்தரங்கு கூட்டத்தில் நடந்த இந்த பயிற்சி முகாமில், புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் ரிச்சர்ட் ஜான் குமார், சாய் சரவணக்குமார், ராமலிங்கம், தட்சணாமூர்த்தி, கே எஸ் பி ரமேஷ், ஏ கே டி ஆறுமுகம், செந்தில் குமார், சம்பத், பிரகாஷ் குமார், சிவசங்கரன், அசோக் பாபு, லட்சுமி காந்தன், கோலப்பள்ளி சீனுவாச அசோக் ஆகியோர் கலந்துக்கொன்டனர். இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 16 பேரில் 13 பேர் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடர்களில் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயல்படுவது தொடர்பாக இந்த முகாமில் விரிவாக எடுத்துரைப்பட்டது.