சினிமா

வடிவேலுவுக்கு ஒமைக்ரானா?… வெளியானது பரபரப்பு அறிக்கை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதால், வடிவேலு மீதான ரெட் கார்டை நீக்கிவிட்டது தயாரிப்பாளர் சங்கம். இதனால் தொடர்ச்சியாகப் படங்களில் காமிட்டாகியுள்ளார். செகன்ட் இன்னிங்ஸை சிறப்பாக ஆரம்பிக்க திட்டமிட்ட வடிவேலு, லைகா தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடித்து வந்தார்.

இந்த படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து கடந்த டிசம்பர் 23ம் தெதி வடிவேலு லண்டணில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். ஒமைக்ரான் பரவல் காரணமாக விமான நிலையம் வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்து. மேலும் முதற்கட்ட பரிசோதனையிலேயே எஸ்.ஜீன் மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, நடிகர் வடிவேலு போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வடிவேலுவின் உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வடிவேலு சீரான உடல் நலத்துடன் இருப்பதாகவும், அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் வடிவேலு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
ALSO READ  சாய் பல்லவி தேசிய அளவில் புதிய சாதனை!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஓடிடி வெளியீட்டை உறுதி செய்தது “ஜகமே தந்திரம்” படத்தின் டீசர் !

News Editor

“பறக்கும் ராசாளியே”- நடிகை பூஜா ஹெக்டே புகைப்படங்கள்

Admin

“கொஞ்சம் பொறுமை காக்கவும்” மாநாடு பட தயாரிப்பாளர் வேண்டுகோள் !

News Editor