கொல்கத்தா:-
மேற்கு வங்கத்தில் நடந்து வரும் வன்முறைக்கு மம்தா முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆளுநர் ஜெகதீப் தங்கர் முதல்வர் பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜியிடம் கோரிக்கை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுக்க மம்தா பானர்ஜி அனைத்து நடவைக்கைகளையும் எடுப்பார் என நம்புகிறேன் என ஆளுநர் கூறியுள்ளார்.
முன்னதாக, மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். எனினும், மம்தா முதல்வர் பதவியேற்க எந்தத் தடையும் இல்லை, பதவியேற்ற 6 மாத காலத்துக்குள் அவர் ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற வேண்டும்.
கடந்த 2011-ம் ஆண்டு முதல்வராக பதவியேற்கும் போதும் மம்தா பானர்ஜி எம்எல்ஏ-வாக இல்லை. முதல்வரான சில மாதங்கள் கழித்து போவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு மம்தா பானர்ஜி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.